தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

0

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா: வராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

தஞ்சாவூர் பிரசித்திபெற்ற பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி, தெற்கு புறத்தில் இருக்கும் பழமையான வராஹி அம்மன் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் போல இந்த ஆண்டும் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அலங்காரங்கள் நடத்தப்படுகின்றன. விழாவின் தொடக்க நாளான நேற்று, காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் வராஹி ஹோமம் நடைபெற்றன. மாலை நேரத்தில், அம்மன் இனிப்புகளை கொண்டு செய்யப்பட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருளைப் பெற்றனர்.

விழாவின் தொடர்ச்சி நிகழ்வுகள் வருமாறு:

ஜூன் 26 – மஞ்சள் அலங்காரம்

ஜூன் 27 – குங்கும அலங்காரம்

ஜூன் 28 – சந்தன அலங்காரம்

ஜூன் 29 – தேங்காய்ப்பூ அலங்காரம்

ஜூன் 30 – மாதுளை அலங்காரம் மற்றும் பஞ்சமி அபிஷேகம்

ஜூலை 1 – நவதானிய அலங்காரம்

ஜூலை 2 – வெண்ணெய் அலங்காரம்

ஜூலை 3 – பழவகைகள் அலங்காரம்

ஜூலை 4 – காய்கறி அலங்காரம்

ஜூலை 5 – மலர் அலங்காரம் மற்றும் வீதியுலா

விழா நாட்களில், காலை 8 மணி முதல் 11 மணி வரை சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு அலங்காரம் மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் கோயில் நிர்வாக குழுவினர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

Facebook Comments Box