வாளுக்கு வாள்… திமுகவைக்கூட பாஜக திருப்பி விட்டது! – முருகனை அரவணைத்துக் கொள்கிறது தமிழக அரசியல் களம்!

0

முருகனை முன்னிறுத்தும் அரசியல் சூழல்

தங்கள் இயலாமையையே உணராமல் திமுக அரசியல்வாதிகள் இன்று முருகனின் பெயரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இன்றைய தமிழக அரசியலில் முருகனை மையமாகக் கொண்டு விவாதங்கள் வலுப்பெற்றுள்ளன.

2021-ல் “கருப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் வெளியான காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜக கடும் எதிர்வினை காட்ட, அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகன் ‘வேல் யாத்திரை’ நடத்தினார். அதிமுக ஆட்சி இருந்த போதும், பாஜகவின் இந்த நடவடிக்கை முருக பக்தர்களை ஒரு குழுவாக இணைத்தது.

2023-ல் சென்னிமலை முருகன் கோயிலைச் சுற்றிய சர்ச்சையில் பாஜக மற்றும் இந்து முன்னணி இணைந்து போராட்டம் நடத்தியதாலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் நீதிமன்றத்தை எட்டியது என்பதாலும் முருக பக்தர்கள் அரசியல் வாசலில் வலிமையாக உள்ளனர் என்பதற்கு சான்றாக இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்டில் திமுக அரசு பழனியில் “அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு” நடத்தியது. திமுக அமைச்சர்கள் முருகனை தூக்கிப் பிடிப்பது போல நடந்தனர். இதன் விளைவாக, வாள் கொடுத்த திமுக, இப்போது வெள்ளி வேல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையை பாஜக ரசித்து ஜூன் 22-ம் தேதி மதுரையில் முத்தமிழ் முருகன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. பாமக தலைவர் அன்புமணி, ஜூலை 25-ல் முருகனை வணங்கி நடைபயணம் தொடங்குவதாக அறிவித்துள்ளார். சீமான் முதலான நாதிக வாதிகளும் முருகனின் பெயரை முன்வைத்து செயல்படத் தொடங்கியுள்ளனர். 2026 தேர்தலில் முருகனை ஒதுக்கி யாரும் நிற்கமாட்டார்கள் எனத் தோன்றுகிறது.

இதைப் பற்றி பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கூறும் போது, “முருகன் உண்மையான பகுத்தறிவுக்குச் சொந்தக்காரர். அவரது கருணை பக்தர்களுக்கும் பகைவர்களுக்கும் சமம். பாஜக தொடக்கத்தில் இருந்து முருகனை மதித்து வருகிறது. ஆனால் திமுக, முருகனை அவமதித்தவர்கள். தற்போது அவர்கள் காட்டும் பாசம் தேர்தல் லாபத்துக்கான நடிப்பு. ஸ்டாலின் உண்மையாக முருகனை மதிக்கிறாரா என்பதற்கு அவர் பழனியில் காவடி எடுத்து வர தயாரா?” என்றார்.

Facebook Comments Box