தோப்பூர் எயிம்ஸ் வளாகத்தில் ஆலோசனை கூட்டம்

0

மதுரை எயிம்ஸ் தலைவர் திரு. பிரசாந்த் லவானியாவின் தலைமையில், ஆலோசனை கூட்டம் நேற்று தோப்பூர் எயிம்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில், எயிம்ஸ் நிர்வாக அதிகாரி திரு. ஹனுமந்தராவ் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ராணி குமார், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய ஹனுமந்தராவ் கூறியதாவது:

4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, தற்போது ராமநாதபுரத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தோப்பூரில் எயிம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கப்பட்டு, பணிகள் நாளும் இரவும் மாறாமல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் கட்டுமானம் முடிந்து, 2026 ஜனவரியில் புதிய கட்டிடத்தில் கல்லூரி செயல்படத் தொடங்கும்.

ஜனவரிக்குள் ஆய்வகங்கள், விடுதி வசதிகள் மற்றும் 150 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையும் உருவாக்கப்படும். 2027-க்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, மருத்துவமனை முழுமையாக செயல்படத் துவங்கும் என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box